Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை திருடன் என்பதா? பல ரகசியங்களை வெளியிடுவேன்: விஷால் அணிக்கு சரத்குமார் எச்சரிக்கை

15 செப், 2015 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Sarathkumar-warnned-Vishal-team

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரமும், ஆலோசனை கூட்டங்களும் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்று சரத்குமார் அணியினரின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்து.


இதில் நடிகை ராதிகா, முகள் சிம்பு, ஷாம், ராம்கி, தியாகு, அசோக், ராதாரவி, வின்செண்ட் அசோகன், ஹம்சவர்த்தன் உள்பட 187 சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது:


நடிகர் என்ற அந்தஸ்து கடவுள் கொடுத்த வரம். கோவிலுக்கு சென்றால்கூட மக்கள் கடவுளை கும்பிடாமல் நம்மை கும்பிடுகிறார்கள். நமக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையை குறைக்கும் விதமான சம்பவங்கள் நடந்து வருகிறது. வருகிற தேர்தலை மனதில் கொண்டு என் மீது சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்கள். நான் அவர்களுக்கு பதில் சொல்லவில்லை. நான் எந்த நடிகனையும் தாக்கி பேச மாட்டேன். அவதூறு கூட மாட்டேன். நான் பொறுமையாக இருப்பதற்கு காரணம் நடிகர் சங்கம் என்கிற குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.


நடிகர் சங்க கடனை அடைக்க உதவினேன். எந்த நடிகர் நடிகைக்கு பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக நின்றேன், நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியபோது உத்தம வில்லன் பிரச்சினை நடந்தது. 36 மணிநேரம் தூங்காமல் உழைத்து அந்த படம் வெளிவர உதவி செய்தேன். கொம்பன் படத்தின் வெளியீட்டுக்கு உதவினேன். பாயும்புலிக்கு உதவி செய்தேன். இப்படி பல உதவிகள் செய்திருக்கிறேன். மஞ்சுளாவும், முரளியும் இறந்தபோது யாரும் இல்லை. நான்தான் நின்று கவனித்தேன். கே.பாலச்தர் மறைந்தபோது ஒரு சாதரண தொண்டனைப்போல வேலை செய்தேன். பலரது உயிரை காப்பாற்றி இருக்கிறேன். எனது காஸ்ட்டியூம் டிசைனரை 7 லட்சம் செலவு செய்து காப்பாற்றினேன். ஊரில் இருந்தால் தினமும் காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை சங்கத்தில் இருந்து வேலை பார்த்தேன்.


சங்கத்திற்கு நிரந்தர வருமானம் வரவேண்டும் என்பதற்காக சங்க இடத்தில் வணிக கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போட்டேன். 24 லட்சம் ரூபாய் மாத வருமானம் வந்திருக்கும் அதை வழக்கு போட்டு கெடுத்தார்கள். பொதுக்குழு சம்மதித்த திட்டத்தை சிலர் எதிர்க்கிறார்கள். இந்த சிலரும் அப்போதே என்னை சந்தித்து கேட்டிருந்தால் ஒப்பந்தத்தைகூட வாபஸ் வாங்கியிருப்பேன். அதைவிட்டுவிட்டு பத்திரிக்கைள் மூலம் என் மீது அவதூறு சொன்னார்கள். நான் பணம் திருடிவிட்டேன் என்று சொன்னது என் மனதை புண்படுத்தியிருக்கிறது.


இதுவரை அமைதியாக இருந்து விட்டேன். தொடர்ந்து அவதூறு பரப்பினால் நானும் பல ரகசியங்களை வெளியிட வேண்டியது இருக்கும். என்னை வாய் திறக்க வைக்காதீர்கள். நான் ரகசியங்களை சொன்னால் பலருக்கு நிம்மதி போய்விடும். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கும். நாங்கள் அகிம்சை வழியில் எங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். உறுதியாக வெற்றி பெறுவோம். இவ்வாறு சரத்குமார் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in