டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள படம் 'பத்து எண்றதுக்குள்ள'. கடந்த சில மாதங்களாக 'பத்து எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கின. தற்போது போஸ்ட்புரடக்ஷன்ஸ் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற விநாயக சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஷங்கரின் 'ஐ' படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம். 'கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதை மிகச்சரியாய் பயன்படுத்தி 'பத்து எண்றதுக்குள்ள'படத்தை பெரிய விலைக்கு பிசினஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது இப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில்'பத்து எண்றதுக்குள்ள' படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை சத்யம் சினிமாஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் அடிபடுகிறது.