பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பானு. கேரள வரவான பானு அந்த படத்தில் போட்ட ஆட்டம் தமிழ் ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் புடைக்கும் அளவுக்கு இருந்தது. நயன்தாரா முகச்சாயலுடன் இருக்கிறார் ; அவரைப் போலவே முன்னணி இடத்தை பிடிப்பார் என்றெல்லாம் போற்றிக் கொண்டிருந்த வேளையில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். அதன் பிறகு தலைகாட்டிய ஒன்றிரண்டு படங்களும் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. ஏன்? என்ற கேள்வியை பானுவிடம் கேட்டால் குடும்ப பிரச்னைதாங்க முழுக்காரணமும் என்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், தாமிரபரணியில் நான் நடிக்கும் போது 9ம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன். என்னை கைட் பண்ண ஆளே இல்லை. அந்த நேரத்திலதான் என்னோட அப்பா தாறுமாறா சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பையெல்லாம் விரட்டியடிச்சார். அப்படியே தப்பி தவறி அவரு கேட்ட சம்பளத்தை கொடுக்க முன் வந்த படங்கள் எல்லாம் என்னை உரிச்சு காட்டுறதிலேயே குறியா இருந்துச்சு. சும்மா பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர, அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்னு ஒதுங்கிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு அழகர் மலையில் நடிக்கிற வாய்ப்பு கொடுத்தார் நடிகர் ஆர்.கே. அப்படியே மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க வந்துட்டேன். இனிமே தமிழ்சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பேன். ஏன்னா என்னோட அப்பா இப்போது எங்களோட இல்லை. அவரை வீட்டை விட்டே அனுப்பிட்டோம், என்று கூறியுள்ளார் பானு.