ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய சினிமாவில் முதன்முறையாக கிருஷ்ணரை ஹீரோவாக்கி 'ஸ்யாமாந்தகம்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது. அது அது என்ன ஸ்யாமாந்தகம்..? சூரிய பகவான் தனது ஆருயிர் நண்பரான சத்ரஜித் என்பவருக்கு சக்திவாய்ந்த 'ஸ்யாமாந்தகம்' என்னும் மணியை அளிக்கிறார். ஆனால் கொஞ்ச காலம் கழித்து அந்த மணி திருட்டு போகிறது. இந்த திருட்டின் பின்னால் கிருஷ்ணர் இருப்பாரோ என சந்தேகிக்கப்படுகிறது. இதைசுற்றி கதை அமைந்துள்ளதாம். இந்தப்படம் மலையாளத்தில் உருவாவதும் அதில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிப்பதும் அதை 'பழசிராஜா' புகழ் ஹரிஹரன் இயக்குவதும் தான் ஹைலைட்டான விஷயம்..
இந்தப்படத்தில் மகாபாரத ஸ்ரீகிருஷ்ணரின் சொல்லப்படாத புது அவதாரம் ஒன்றை ரசிகர்களுக்கு விருந்தாக்க இருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன். பிருத்விராஜும் தன் பெயரை சரித்திரத்தில் நிலைநாட்டியே ஆகவேண்டும் என ஸ்ரீகிருஷ்ணராக மாற தயாராகிவிட்டார். வரலாற்று கதை என்கிறபோது அதில் நடிகர்கள் தேர்வு என்பது முக்கியமானது.. கடந்த ஒரு மாதமாக இயக்குனர் ஹரிஹரன் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமாக அலைந்து படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை ஒரு வழியாக ஒப்பந்தம் செய்துவிட்டாராம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.