மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஸ்மைல் ப்ளீஸ் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவரே பாடி, இசை அமைத்து ஆடியுள்ளார். உலக மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் பலரின் சிரிப்பை பதிவு செய்து அதோடு ஸ்ரீகாந்த் தேவா ஆடிப்பாடியுள்ளார். இந்த ஆல்பத்துக்கு யுகபாரதி பாடலை எழுதியுள்ளார், கே.சி.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மீடியாபை தயாரித்துள்ளது, எஸ்.மகேஷ் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்துள்ளது.
இதுபற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறியதாவது: ஒரு இசை ஆல்பம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆல்பம்தான் இதற்கு இன்ஸ்பிரேஷன். உலகம் முழுவதும் இசை ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ் ஆல்பங்களும் உலக அளவில் பேசப்பட வேண்டும். ஸ்மைல் ப்ளீஸ் ஆல்பத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. ஆல்பத்தில் நான் ஆடியிருப்பதை பார்த்து நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது, ஆனால் எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. என்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.