ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் தற்போது சர்ச்சைகளில் சிக்க துவங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடுவிரலை காட்டிய புகைப்படத்தை டுவிட்டரில் போட்டு சர்ச்சைக் கிளப்பிய பூரி ஜெகன்நாத், தற்போது ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூக வலைதள வாசிகள் மத்தியில் பூரி ஜெகன்நாத்தின் செயல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தனது சொந்த பகையை தீர்த்துக் கொள்வதற்கு பூரி ஜெகன்நாத் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
தற்போது லோபர் படத்தை இயக்கி வரும் பூரி ஜெகன்நாத் அக்கதையை பல முன்னணி நடிகர்களிடம் கூறியும் அவர்கள் நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 150வது படத்தை பூரி ஜெகன்நாத் இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் பூரி ஜெகன்நாத் கூறிய கதையில் இரண்டாம் பாதி தனக்கு பிடிக்கவில்லை என சிரஞ்சீவி செய்தியாளர்கள் மத்தியில் வெளிப்படையாக கூறினார். இதனால் பூரி ஜெகன்நாத் விரக்தி அடைந்துள்ளதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.