டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது ஒரு காமெடியனாக சினிமாவில் இடம்பிடித்தாலே போதும் என்பதுதான் சந்தானத்தின் ஆசையாக இருந்தது. ஆனால் வந்தவேகத்தில் அவர் வேகமாக வளர்ந்து நின்றார். அதோடு அவரது காமெடிக்கு இருந்த வரவேற்பு காரணமாக பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையான வேடங்களில் நடித்தார் சந்தானம். அப்படி நடித்த படங்கள் வெற்றி பெற்றதைப்பார்த்த சந்தானத்துக்கு, ஏன் நாமே ஹீரோவாக நடிக்கக்கூடாது என்ற ஆசை ஏற்பட்டது. அதன்பிறகுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோ அரிதாரம் பூசினார்.
ஆனால் அந்த படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. என்றாலும், உடனடியாக இனிமே இப்படித்தான் என்றொரு கதையை ரெடி பண்ணி தானே சொந்தமாக தயாரித்து நடித்தார் சந்தானம். அந்த கதையில் ஒரு கருத்தும் சொன்னார். காமெடி கலந்து கருத்து சொன்ன அந்த படம் வெற்றி பெற்றது. அதனால் நல்ல படங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை சந்தானத்துக்கு ஏற்பட்டது.