தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் ஏஞ்சலினா ஜோலி. ஹாலிவுட் நடிகையான இவர், ஐநா சபையில் அகதிகளுக்கான பாதுகாப்பு தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதனால், பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்தால் உடனே தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், ஈராக், சிரியா நாடுகளில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இது ஒரு வன்கொடுமை செயலாகும். இதற்கு பயந்து ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகிறார்கள். இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதோடு, பாலியல் பலாத்காரத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமைகளை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க முன்வரவேண்டும் என்று உலக நாடுகளுக்கு ஏஞ்சலினா ஜோலி அழைப்பு விடுத்துள்ளார்.