பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆர்யா, கிருஷ்ணா, சுவாதி, தீபா சனனதி நடிப்பில் உருவாகியுள்ள யட்சன் படம், செப்., 11ம் தேதி வெள்ளியன்று வெளியாகியுள்ளது. எழுத்தாளர்கள் சுபா எழுதிய கதை ஒன்று வாரஇதழில், யட்சன் என்ற பெயரில் வெளியானது. அதைத்தான் படமாக இயக்கியுள்ளார்கள். இந்நிலையில் இப்படம் நாளை வெளியாக உள்ளநிலையில், படத்தின் ரிலீஸ்க்கு முன்பாக யட்சன் கதையையும் புத்தகமாக வெளியிட இருக்கிறார்கள். சென்னை, பிரசாத் லேப்பில் காலை 10.00 மணிக்கு யட்சன் புத்தகத்தை, இயக்குநர் விஷ்ணுவர்தன் முன்னிலையில் நடிகர் ஆர்யா வெளியிட நடிகர் கிருஷ்ணா பெற்று கொள்கிறார். இந்தப்புத்தகத்தை சுபா பப்ளிகேஷனே வெளியிடுகிறார்கள்.
முதன்முறையாக ஒரு படத்தோடு, அந்தப்படம் தொடர்பான புத்தகமும் வெளியிடப்படுவது இதுதான் முதல்முறை. ஆக தமிழ் சினிமாவுக்கு இது புதுசு...!
இதனிடையே விஷ்ணுவர்தன் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது...
இதுவரை நான் 8 படங்கள் இயக்கியுள்ளேன். இதில் அஜித்தை வைத்து 2 படமும், ஆர்யாவை வைத்து 5 படங்களும் இயக்கியுள்ளேன். இரண்டு பேரும் என்னை நம்புவார்கள். சிலரோடு மட்டும் தான் நாம் படம் பண்ணும் போது ஒரு திருப்தி இருக்கும். அந்த திருப்தி இருவரிடமும் உள்ளது. அதனால் தான் தொடர்ந்து இவர்களோடு படம் பண்ணுகிறேன். இப்படித்தான் படம் எடுப்பேன் என்று எந்தவொரு வரைமுறையும் இருக்காது. எனக்கு எது பிடிக்குமோ அதைத்தான் படமாக இயக்குவேன் என்று கூறினார்.