விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
“சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக, ரஜினிகாந்த் வேலை செய்து வந்தார்,” என, திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில், கவிஞர் பரமசிவன் எழுதிய, ஒரு தமிழ்க் கவிஞனின் ஆங்கில பாடல்கள் என்ற நுால் வெளியீட்டு விழா, அண்மையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பங்கேற்று பேசியதாவது: சினிமாவில் நடிப்பதற்கு முன், ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் எம்.ஜி.ஆர்., அதனால் தான், அவர் தமிழக முதல்வரான பின், சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதேபோல், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர், ஆரம்ப காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டவர்கள். அவர்களது கடின உழைப்பு, திறமை, புத்திசாலித்தனத்தால், சினிமாவில் சாதனை படைத்தனர்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், ரஜினிகாந்த் கண்டக்டர் வேலை செய்து கொண்டிருந்தார் என்பது தான், எல்லாருக்கும் தெரியும். உண்மையில், ரஜினி, கண்டக்டர் வேலைக்கு முன், மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இதை அவரே என்னிடம் சொன்னார்.
ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்தபோது, அவர் நடிக்க வேண்டிய காட்சியை முடித்து விட்டு, அரிசி ஆலையில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மீது படுத்து தூங்கிவிட்டார். இதற்கிடையே, வேறொரு காட்சி எடுத்து முடித்து விட்டு, ரஜினி நடிக்க வேண்டிய காட்சிக்காக தேடியபோது, அவர், நெல் மூட்டை மீது தூங்குவதை அறிந்து எழுப்பினேன். நெல் மூட்டை மீது படுத்தால், உடம்பு அரிக்காதா? என கேட்டேன். அதற்கு, நான் நடிக்க வருவதற்கு முன், மூட்டை தூக்கும் கூலி வேலை செய்தேன்; அதனால், எனக்கு உடம்பு அரிப்பெல்லாம் பழக்கமாகி விட்டது என, ரஜினி, கூலாக சொன்னார்.
இவ்வாறு அவர் பேசினார்.