ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். தற்போது புலி படத்தில் தனது பணியை முடித்து கொடுத்துவிட்டு என்கிட்ட மோதாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
புலி படத்தின் அனுபவம் பற்றி நட்ராஜ் கூறியதாவது: துப்பாக்கி படத்தில் எனது பணியை பார்த்து விஜய் என்னை அழைத்து எனது அடுத்த படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவாளர் என்றார். ஆனால் அது இவ்வளவு பெரிய படமாக இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. இயக்குனர் சிம்பு தேவன் கதை சொன்னபோது அதில் ஒளிப்பதிவுக்கு எத்தனை பெரிய முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்தேன். இந்த சவாலில் ஜெயிக்க வேண்டும் என்று உறுதி எடுத்தேன்.
அப்போதுதான் நான் நடித்த சதுரங்க வேட்டை படம் ஹிட்டாகியிருந்தது. எனது நண்பர்கள் இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள கேப் விடாமல் நடிக்க வேண்டும் என்றார்கள். நான்தான் புலி படம்தான் எனக்கு முக்கியம் மற்றதெல்லாம் அப்புறம் என்று கூறிவிட்டேன். எங்கிட்ட மோதாதே டீம் எனக்காக காத்திருப்பதாக சொன்னார்கள். சொன்னபடி புலி படத்தை முடித்துக் கொடுத்து விட்டு நடிக்க வந்துவிட்டேன்.