பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் கைப்புள்ள என்ற கேரக்டரில் நடித்த வடிவேலு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நடத்தி வந்தார். அந்த பெயரில்தான் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்தார். அதையடுத்து அவர் பேசிய வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் உள்பட பல டயலாக்குகளில் தற்போது படங்கள் உருவாகி வருகின்றன.
இந்தநிலையில், சுந்தர்.சி நடித்த நகரம் மறுபக்கம் என்ற படத்தில் நாய் சேகர் என்றொரு வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு. நாயகி ஜோதிர்மயியின் முறை மாமன் வேடத்தில் நடித்த வடிவேலுவை நேரில் பார்த்தாலே மயங்கி மயங்கி விழுவார் ஜோதிர்மயி. அதோடு அந்த படத்தில் எந்த தவறும் செய்யாமலேயே தன்னை ரவுடி என்று சொல்லிக்கொண்டு, போலீஸ் ஜீப்பில் ரவுடிகளோடு தானும் ஏறும் வடிவேலு, நானும் ரெளடிதான் ஜெயிலுக்குப்போறேன் என்று தப்பட்டம் அடித்தபடியே போலீஸ் ஜீப்பில் ஏறி செல்வார்.
அந்த வடிவேலுவின் கதாபாத்திரத்தை தழுவிதான் தற்போது விஜயசேதுபதி-நயன்தாரா இணைந்துள்ள நானும் ரெளடிதான் படத்தின் கதை உருவாகியிருக்கிறதாம். அந்த வகையில், ரெளடி வேடத்தில் நடித்திருக்கும் விஜயசேதுபதி நாய் சேகர் வடிவேலுப் போன்ற ரெளடிதானாம். அதனால் படம் முழுக்க செம காமெடியாம். இருப்பினும் ரசிகர்களுக்கு அது ஒரு சஸ்பென்சாக இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது அப்படத்தின் போஸ்டர்களில் விஜயசேதுபதி ரப் அண்ட் டப்பாக நிற்பது போன்ற போட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.