ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த நடிகர் பசுபதி சில கொள்கைகளை வைத்திருக்கிறார். அந்த கொள்கையின்படிதான் படங்களில் நடிக்கவே ஒப்புக்கொள்வார்.
இந்த கொள்கையின் காரணமாகவே பசுபதி காணாமல் போனார். பசுபதியைப்போலவே கொள்கையின் காரணமாக காணாமல்போன மற்றொரு நடிகர் கிஷோர். பொல்லாதவன், வெண்ணிலா கபடிக் குழு ஆடுகளம் உட்பட பல படங்களில் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்த்தார். தமிழ் படங்கள் மட்டுமின்றி சில தெலுங்கு, கன்னட, மலையாள படங்களில் நடித்துள்ள கிஷோர் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதாக சொல்லப்படுகிறது. அதனால் தமிழில் அவரை அதிகம் காணமுடியவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார் கிஷோர். அந்த படத்தின் பெயர் புலி முருகன். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கிறார் கிஷோர். இப்படத்தில் மிருகங்கள் நடமாடும் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் வாழும் முருகன் என்ற முரட்டு கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார்.