'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி. ஹீரோயினியாகவும் அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும், காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் என பல படங்களில் நடித்தார். அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித்துடன் காதல் மலர்ந்ததை அடுத்து, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதனால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம்வரவேண்டிய ஷாலினி சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி முழுநேர இல்லத்தரசியாகி விட்டார்.
இந்த நிலையில், தான் விட்டுச்சென்ற இடத்தை தனது தங்கை ஷாமிலியை வைத்து பிடித்து விட வேண்டும் என்று நினைக்கும் ஷாலினி, அவருக்கான கதைகளை பல மாதங்களாக கேட்டு வந்தார். குறிப்பாக, ஹீரோயினிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்க வேண்டும் என்று துருவி துருவி கதை கேட்டு வந்தவர், விக்ரம்பிரபு நடிக்கும் வீரசிவாஜி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என இரண்டு படங்களை தற்போது தங்கைக்காக ஓகே பண்ணியிருக்கிறார்.