வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாளத்தில் நான்கு வருடங்களுக்கு முன் 'ட்ராபிக்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர்தான் ராஜேஷ் பிள்ளை.. கடந்த ஜனவரியில் இவர் இயக்கத்தில், நிவின்பாலி, அமலாபால் நடிப்பில் வெளியான 'மிலி' திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது. இந்தப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ராஜேஷ் பிள்ளை. த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனும் ஜெயசூர்யாவும் இணைந்து நடிக்கின்றனர். அதைவிட முக்கியமான விஷயம் மஞ்சு வாரியார் இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிய பாலிவுட் கேமராமேனான சந்தோஷ் தூண்டியில் என்பவரை அழைத்து வந்துள்ளார் ராஜேஷ் பிள்ளை. 'க்ரிஷ்', 'ரவுடி ரத்தோர்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சந்தோஷ் தூண்டியில் கேரளாவை சேர்ந்தவர் தான். இன்னும் சொல்லப்போனால் மலையாளத்தில் தான் தனது கேரியரையே இவர் ஆரம்பித்தார். பின்னர் பாலிவுட்டுக்கு சென்றாலும் கூட, மோகன்லால் நடித்த் 'ஆகாச கோபுரங்கள்' உட்பட ஒரு சில மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். அடுத்தமாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.