Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாண்டிராஜ், குறளரசன் மோதல்: வீதிக்கு வருகிறது இது நம்ம ஆளு பிரச்னை

07 செப், 2015 - 11:33 IST
எழுத்தின் அளவு:
Idhu-Nama-Aalu-issu-:-Pandiraj---Kuralarasan-clash

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க, சிம்பு, நயன்தாரா நடிக்க, குறளரசன் இசை அமைக்க, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ''இது நம்ம ஆளு''. சிம்பு நடித்த வாலு படம் பல ஆண்டுகளாக பிரச்சினையில் சிக்கி தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதற்குள் இது நம்ம ஆளு படத்தின் பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது.


படத்தை முடித்துக் கொடுத்து விட்ட பாண்டிராஜ் "என்னமோ பண்ணிக்குங்க" என்று படத்தை விட்டு வெளியே வந்து பசங்க 2 படத்தை முடித்து விட்டு, அடுத்து விஷாலை வைத்து படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் "படத்திற்கு இன்னும் 2 பாட்டு படமாக்க வேண்டியது இருக்கிறது நயன்தாராவிடம் தேதி வாங்கி தாருங்கள்" என்று டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டிருக்கிறார். "எனது தேதிகளை வீணாக்கி விட்டார்கள் நான் வேறு படத்தில் நடிப்பதால் இனி அதில் நடிக்க மாட்டேன்" என்று நயன்தாரா கூறிவிட்டார்.


இந்த நிலையில் பாண்டிராஜ் "படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஒரு குத்துப்பாட்டுதான் பாக்கி இருக்கிறது. அது கதைக்கோ, படத்துக்கோ முக்கியமானதல்ல. மற்ற படங்களை விட இது நம்ம ஆளு படத்துக்கு நயன்தாரா நிறைய தேதிகள் கொடுத்து நடித்துக் கொடுத்தார்" என்று கூறியிருக்கிறார். இது டி.ஆர் தரப்பை கொந்தளிக்க வைத்திருக்கிறது. சிம்பு குத்துப்பாட்டு கண்டிபாக வேண்டும் என்று கூறிவந்திருக்கிறார். இதனால் பாண்டிராஜூம், சிம்புவும் டுவிட்டரில் மோதிக் கொண்டார்கள். இடையில் சிலர் இதற்கு சமாதானம் செய்தனர்.


இந்த நிலையில் சிம்புவின் தம்பியும், படத்தின் இசை அமைப்பாளருமான குறளரசன் "படத்திற்காக 5 பாடல்களை முன்பே முடித்து கொடுத்து விட்டேன். இதில் 3 பாடல்களைத்தான் படமாக்கி இருக்கிறார்கள். பின்னணி இசை அமைக்க இதுவரை படத்தை என்னிடம் தரவில்லை" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த பாண்டிராஜன் "நீ யார்ன்னு எனக்குத் தெரியும், நான் யாருன்னு உனக்குத் தெரியும், நம்ம ரெண்டு பேரும் யானுன்னு ஊருக்கே தெரியும்" என்று கவுண்டமணி டயலாக்கை டுவிட்டரில் போட்டு குறளரசனை கலாய்த்திருந்தார். அதோடு தனக்கு முழுமையான சம்பளத்தை தரவில்லை என்றும் இதுவரை இது நம்ம ஆளு படத்தில் நடந்தது என்ன என்பதை விரைவில் மீடியாக்கள அழைத்து கூறப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.


குறரளரசனும் "நானும் அப்பாவும் விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பாண்டிராஜ் என்னை அவமானப்படுத்தியதை கூறுவேன்" என்று கூறியிருக்கிறார்.


அடுத்தடுத்து இருவரும் மீடியாவை சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஒருவர் மீது மற்றொருவர் அனல் பறக்கும் புகார்களை அள்ளி வீச இருக்கிறார்கள். டி.ஆர் அழுகையும், ஆவேசமுமாக பேச இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in