கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
உனக்கென்ன வேணும் சொல்லு டீசரும் சரி, முன்னோட்டமும் சரி வெளி வந்த நாள் முதல் எல்லோரையும் கவர்ந்து வருகிறது.பேய் யுகத்தில் வெளி வரும் பேய் படம் என்பதை தவிர , sentiments கூட நிறைந்து உள்ள இந்தப் படத்தில் காதலும் உண்டு என்பதை உணர்த்த இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், இப்பொழுது இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலின் ஆதி மூலத்தை விவரிக்கிறார்.
கார்த்திக்கும், ஜூடியும் தற்செயலாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அறிமுகமாகிறார்கள். ஒரு பெண்ணின் சகவாசத்திற்காக ஏங்கும் கார்த்திக் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜுடியை சந்திக்க வருகிறான். வந்த இடத்தில் 28 வயது ஆகும் ஜூடியின் வெளிப்படையான பேச்சும்,அழகும், அவளது 8 வயது மகள் டெய்சியின் மேல் அவள் கொண்டு உள்ள பாசமும் கண்டு மயங்குகிறான். அந்தத் தருணத்தில் ,ஜுடியிடம் அவன் மனம் கொண்ட காதலை விவரிக்கும் இடம் தான் இந்தப் பாடல்.
எனக்குள் உணரும் ஒன்று
வருவாய் கண்ணின் முன்னே
தேடும் பொருள்கள் யாவும்
தெளிவாய் தெரியும் பெண்ணே
புதிதாய் வந்த உறவு
கதையாய் மலரும் கண்ணே
வலையை விரிக்கும் காதல்
வசமாய் மாட்டும் இங்கே
தென்றல் கூட்டி வந்தாளே?
என்னை வென்ற சென்றாயோ - நீ?
என்னை அணைக்கும் பேரழகே
மண்நிற மேனி பொன் கொண்ட சிலையே
நீ என் பேனா?. காதல்
உன் நினைவில் தான் துடிக்குதென்பேனா?
வா அன்பே வா - வாழும்
காலங்கள் இதுவரை வசந்தங்கள் தானா?
நம் காதல் உணர
உன்னை கண்ட பொழுதில்
உலகம் உறைய கண்டேன்
வெண்ணிற பனியின் துளியே தானோ நீ
பெண்மை தந்த மாற்றம்
என்னுள்ளே எரிய கண்டேன்
இடையர நிரம்பும் காதல்
என்னுள் இறங்க கண்டேன் நானே
உன்னாலே கண்டேனே பேரின்பம் நூறு கோடி
தன்னாலே வந்தேனே மெய்மாயம் தன்னை தேடி
மொட்டு மலர்ந்திட வந்தாலே
சிட்டு போல் அவள் சிரித்தாலே
எட்டு போல் அவள் இடையாலே
சுட்டு போட்டு அவள் சென்றாலே
காட்டு பூக்களும் நீதானே
பாட்டு புலவனும் நான்தானே
வீணை தந்திகள் நீதானே
மீட்டும் விரல்களும் நான்தானே
தொட்டு தழுவிட வந்தேனே
பட்டு விலகிட நின்றேனே
கட்டு குலைந்திட கண்டேனே
நெஞ்சம் முழுதும் நீ தானோ?
கொஞ்சி பேசிடு கண்ணாலே
கெஞ்சி கேக்குது தன்னாலே
காதல் மாயை தந்தாயடி....
தொட்டு தழுவிட வந்தேனே
பட்டு விலகிட நின்றேனே
கட்டு குலைத்திட கண்டேனே
நெஞ்சம் முழுதும் நீ தானோ?
கொஞ்சிடு பேசிடு கண்ணாலே
கெஞ்சி கேக்குது தன்னாலே
காதல் மாலை தந்தாயடி...
மணமாகாத ஒரு ஆணுக்கும் , மனமும் மணமும் உடைந்த ஒரு பெண்ணுக்குள் ஏற்படும் நிகழ்வுகளே இந்தப் பாடல்.. இந்தப் பாடலை தொடர்ந்து அவர்களிடம் ஏற்படும் விபரீதமான மாற்றங்கள் தான் உனக்கென்ன வேணும் சொல்லு என்று விவரிக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.