ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இப்போது ரிலீசாகும் படங்கள் எல்லாம் போட்ட காசு கூட வருவதில்லை என்று தியேட்டர் அதிபர்கள் புலம்பி வருகின்றனர். அதேசமயம் எம்.ஜி.ஆர்., படங்களை இப்போது ரீ-ரிலீஸ் செய்தால் கூட வசூலில் சாதனை படைக்கிறது. எம்.ஜி.ஆர்., என்றுமே ஒரு சகாப்தம் என்று அவர்கள் பெருமைப்படுகின்றனர்.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் பழனிச்சாமி கூறியதாவது, இப்பொதெல்லாம் புதிய படங்களை ரிலீஸ் செய்தாலே வசூலாவது ரொம்ப கஷ்டம். போட்ட காசை எடுப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடுகிறது. அதேபோல் இப்போதுள்ள சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட நடிகர்களின் ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்தால் சுத்தமாக வசூலாவதில்லை. சமீபத்தில் பாட்ஷா மற்றும் கில்லி போன்ற படங்களை ரீ-ரிலீஸ் செய்தோம் ஆனால் வசூலாகவில்லை.
அதேசமயம் எம்.ஜி.ஆர்., படங்களை இப்போது ரிலீஸ் செய்தால் கூட வசூலில் சாதனை படைக்கிறது. குறிப்பாக 1960-70களில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் இன்றளவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சில தினங்களுக்கு முன்னர் தான் அவர் நடித்த "நாடோடி மன்னன்" படத்தை ரீ-பிரிண்ட் போட்டு வெளியிட்டோம். நகரங்கள் மற்றும் கிராமங்களில் இப்படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது. இப்போதுள்ள நடிகர்களுக்கு வைக்கும் பேனரை காட்டிலும், எம்.ஜி.ஆருக்கு அதிகமான பேனர்கள் வைத்துள்ளனர். இதை பார்க்கும்போது எம்.ஜி.ஆர்., படங்களுக்கு இப்போதும் வரவேற்பு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. எம்.ஜி.ஆர்., என்றுமே ஒரு சகாப்தம் தான் என்று கூறினார்.
இதனிடையே சில ஊர்களில் எம்.ஜி.ஆர்., படங்கள் ரிலீசான தியேட்டர்களுக்கு சில கட்சியினர் சென்று படம் பார்க்க வருபவர்களுக்கு வேஷ்டி, சேலை, பிரியாணி உள்ளிட்ட பொருட்களை வழங்கி பிரச்சாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.