ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ராதா. 80களில் தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருந்த ஒரு நடிகை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என முன்னணியில் இருந்த ஒரு நடிகை. அழகுடன் அற்புதமான நடிப்புடன் அந்தக் கால ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். 'முதல் மரியாதை' படத்தில் சிவாஜிகணேசனுக்கு இணையாக அவருடைய நடிப்பும் அப்போது பாராட்டப்பட்டது. அந்தப் படத்தில் சொந்தக் குரலில் அவர் பேசியிருந்தால் கண்டிப்பாக தேசிய விருதை வாங்கியிருப்பார்.
முன்னணி ஹீரோயினாக இருந்த ராதா அவருடைய இரண்டு மகள்களையும் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். மூத்த மகள் கார்த்திகா 'கோ' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பின் வெளிவந்த 'அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை' இரண்டு படங்களுமே தோல்வியைத் தழுவியது. அவர் நாயகியாக நடித்துள்ள 'வா டீல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து எவ்வளவோ நாளாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது.
இளைய மகள் துளசியை மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் படு தோல்வியைத் தழுவியதுதான் மிச்சம். அடுத்து துளசி நடித்த 'யான்' படமும் அதே படுதோல்வி வரிசையில் இணைந்தது. அதன் பின் துளசி வேறு எந்தப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. தான் நடிக்கும் போது முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ராதா தனது இரண்டு மகள்களையும் முன்னணி ஹீரோயின்களாக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால், கார்த்திகாவும், துளசியும் ராசியல்லாத நாயகிகளின் பட்டியலில் இணைந்து விட்டார்கள். அதை எந்தப் படம் மாற்றப் போகிறதோ...?