மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பரவிவரும் புகைப்படங்களைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அப்படி என்ன புகைப்படம்? சிரிப்பு நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் பார்ட்டி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அந்தப் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர் விஜய், சில ரவுண்டு அடித்த நிலையில் அரைபோதையுடன் காட்சியளிக்கும் புகைப்படங்கள்தான் அவை.
மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வெங்கட்பிரபு, வைபவ், விஜய்வசந்த் உட்பட சிலர் கலந்து கொண்ட அந்தப் பார்ட்டியில் சற்றே நிதானம் தவறியநிலையில் காணப்படுகிறார் விஜய். அதன்காரணமாகவோ என்னவோ மிர்ச்சி சிவாவின் தோளில் கைபோட்டபடி அரைமயக்கத்தில் காணப்படுகிறார் விஜய். பிரேம்ஜியின் பிறந்தநாள் முடிவடைந்து ஏறக்குறைய ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.
இந்தநிலையில் எப்போதோ நடைபெற்ற அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இத்தனை நாட்களாக வெளியிடப்படாத அந்த படங்கள் விரைவில் புலி படம் ரிலீஸ் ஆக உள்ள இந்த நேரத்தில் வெளியிடப்பட்டது ஏன்? இதன் பின்னணியில் வேறு காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அதுமட்டுமல்ல, அடுத்த வருடம் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சியைத் தொடங்கி விஜய் போட்டியிட உள்ளதாகவும் தகவல் அடிபட்டுவரும்வேளையில் அவர் போதையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது விஜய்யின் இமேஜை டேமேஜ் பண்ணி உள்ளது.