இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஒரு பக்கம், வெண்ணிலாகபடி குழு, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா போன்ற அதிஅற்புதமான படங்களை இயக்குவார் சுசீந்திரன். இன்னொரு பக்கம், நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற மசாலாப்படங்களையும் மிக நேர்த்தியாக இயக்குவார். முக்கியமாக இவர் இயக்கிய பாண்டிய நாடு யதார்த்தமான சம்பவங்கள், காட்சியமைப்புகளுடன் கூடிய மசாலாப்படமாக இருந்தது. அதுவே அப்படத்தின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது.
இதே சுசீந்திரன் விக்ரமை வைத்து இயக்கிய ராஜபாட்டை என்ற படம் படு தோல்வியடைந்தது. அது மட்டுமல்ல, சுசீந்திரன் இயக்கிய படங்களிலேயே சகிக்க முடியாத படம் என்ற கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தது. அந்த விமர்சனத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட இயக்குநர் சுசீந்திரன் பிரபல பத்திரிகைக்கு அளித்தபேட்டியில் ராஜபாட்டை படத்தை இயக்கியதற்காக தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
இப்போது எதற்கு பழைய கதை எல்லாம்?
பாண்டிய நாடு வெற்றிப்படத்தைக் கொடுத்த சுசீந்திரன் - விஷால் கூட்டணி மீண்டும் இணைந்த பாயும்புலி படம் வெளியாகி இருக்கிறது. வழக்கம்போல் ஆன்லைன் சுவரொட்டிகள் படத்தை ஆகா ஓகோவென புகழ்ந்தாலும் பாயும்புலி படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதே உண்மையான நிலவரம். அதுமட்டுமல்ல ராஜபாட்டை-2 என்றெல்லாம் கடுமையான கமெண்ட்டுகளையும் சந்தித்து வருகிறது.