டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நலந்தானா உள்பட பல படங்களில் நடித்தவர் ஜோதிஷா. கிளாமர், ஹோம்லி என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்துவரும் இவர், தற்போது பேய் இருக்கா இல்லையா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருடன் இன்னும் இரண்டு நடிகைகளும் நடிக்கும் இந்த படத்தில், ஒரு காட்சியில் பேயாக நடித்தபோது அந்த கதாபாத்திரமாகவே மாறி சுற்றி நின்றவர்களை மிரட்டி விட்டாராம் ஜோதிஷா.
இதுபற்றி பேய் இருக்கா இல்லையா படத்தின் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறுகையில், பேயாக நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, பயங்கர ஆவேசமாகி நடித்தார் ஜோதிஷா. தலைவிரி கோலத்துடன், கண்களை உருட்டி, முகத்தில் ஆவேசம் காட்டி அவர் நடித்தது படுபயங்கரமாக இருந்தது. அதோடு, அந்த காட்சி ஓகே ஆகி கட் சொல்லப்பட்ட பிறகும் அவர் அதே ஆவேசத்துடன் நடந்து சென்று கொண்டேயிருந்தார். அவர் அருகே சென்று அவரை உசுப்பிய பிறகுதான் நிஜ உலகத்திற்குள் வந்தார். அந்த அளவுக்கு அந்த பேய் கதாபாத்திரத்தை உள்வாங்கி ரியலாக நடித்தார் ஜோதிஷா. அதோடு, அவருக்குள் இருந்த பேயை ஓட்டச்சென்ற சாமிநாதன், கொட்டாச்சி போன்ற சாமியார்களும் அவரது ஆவேசம் கண்டு ஒருகணம் ஆடிப்போனார்கள். அப்படியொரு மிரட்டல் பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார் ஜோதிஷா என்கிறார் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்.