ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் திருச்சி விநியோகஸ்தர் சிங்காரவேலன். அது தொடர்பான அறிக்கைகள், பேட்டிகள், போராட்டங்கள் மூலம் பிரபலமடைந்த இவர், லிங்கா நஷ்டஈட்டுத்தொகையை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையையும் கையில் எடுத்தார்.
லிங்கா விவகாரத்தின் தொடர்ச்சியாக விஷால் நடித்த பாயும்புலி படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் ரெட் போடுமளவுக்கு விவகாரம் ஈடுபிடித்தது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார், காரசாரமான பேட்டி, நீதிமன்றத்தில் வழக்கு என சிங்காரவேலனின் குடைச்சல் அதிகமானதால், கங்காரு வியாபாரத்தில் ஏற்பட்ட தகராரை காரணம் காட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இவருக்கு ரெட் போடப்பட்டது.
இதனால் கடுப்பான சிங்காரவேலன் தற்போது தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போட்டியாக புதிதாக ஒரு சங்கத்தைத் தொடங்க இருக்கிறார். இவர் தொடங்க உள்ள சங்கத்துக்கு ராக்லைன் வெங்கடேஷ், மற்றும் ஈராஸ் பட நிறுவனம் ஆதரவு தருவதாக கூறியுள்ளனராம். இன்னும் ஓரிருநாட்களில் தன்னுடைய புதிய சங்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார் சிங்காரவேலன்.