டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் சென்னையில் ஆரம்பமாக உள்ளது. முதலில் இந்தப் படம் மலேசியாவில் ஆரம்பமாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால், முதல் கட்டப் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த முடிவு செய்தனர்.
இப்போது 'கபாலி' படத்திற்காக இரண்டு பிரம்மாண்டமான அரங்குகள் சென்னையின் இரு வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் படப்பிடிப்பு என்றாலே சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ ஆகிய இடங்களில்தான் அரங்குகளை அமைப்பார்கள். ஆனால், இப்போது அங்கு ஸ்டுடியோக்களில் உள்ள அரங்குகள் மிகவும் குறைந்துவிட்டது. இருக்கும் சில அரங்குகளை டிவி நிகழ்ச்சிகளை நடத்த எடுத்துக் கொண்டார்கள். சென்னையில் உள்ள திரைப்பட நகரமும் ஏறக்குறைய காணாமல் போய்விட்டது.
அதனால், இப்போது பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவிலும், பனையூரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவிலும் தான் நடைபெறுகின்றன. ஈவிபி ஸ்டுடியோவில் 'மாஸ், தூங்காவனம்' போன்ற படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆதித்யராம் ஸ்டுடியோவில் 'புலி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்போது அந்த இரண்டு ஸ்டுடியோக்களில் தான் 'கபாலி' படத்திற்கான பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.