டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜித் நடித்த வாலி படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. அதன்பிறகு விஜய்யின் குஷி படம் மூலம் பிரபலமானார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் நடித்த படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்த ஜோதிகாவுக்கு சந்திரமுகி பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. ஆனபோதும், திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகியிருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தில் லீடு ரோலில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படமும் வெற்றி பெற்றதால், தொடர்ந்து நடிக்க தயாராகி விட்டார் அவர்.
ஆனால், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜோதிகா. இந்நிலையில், தனது கணவர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படங்களின் கணக்கு வழக்குகளையும் அவ்வப்போது கவனித்து வரும் ஜோதிகா, சமீபத்தில் கேட்ட பல கதைகளில் ஒரு கதை அவரை மிகவும் பாதித்து விட அந்த படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். 36 வயதினிலே படத்துக்கு இணையான கதையில் உருவாகும் அந்த படத்தை இயக்கும் டைரக்டர், தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாம்.