இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இந்திய அளவில் மெகா பட்ஜெட்டில் உருவான படம் பாகுபலி. சரித்திர கதையில் உருவான அப்படத்தின் பிரமாண்டம் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, கவர்ச்சி கதாநாயகி தமன்னாவைகூட புரட்சி பெண்ணாக காட்டியிருந்தார் ராஜமவுலி. ரம்யாகிருஷ்ணனை அவருக்கே உரிய மிரட்டலான வேடத்தில் நடிக்க வைத்தார். அவர்களுடன் பிரபாஸ், அனுஷ்கா, ராணா போன்றோருக்கும் கச்சிதமான வேடங்களே கிடைத்திருந்தன.
அப்படி பலரது திறமையில் உருவான ராஜமவுலியின் பாகுபலி படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. 50 நாட்களை கடந்து இன்னமும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால், ஏற்கனவே அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான 30சதவிகித படப்பிடிப்பை முடித்து விட்ட ராஜமவுலி, அடுத்து 2ஆம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், பாகுபலி படத்தை இயக்குவதற்கு முன்பு ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ள வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியபோது அவர் 5 கோடி சம்பளம் கேட்டதாகவும், பட்ஜெட் தாங்காது என்பதால் அதற்கு ராஜமவுலி மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியபோது, நல்ல வாய்ப்பை இழந்து விட்டேனே என்று பீல் பண்ணிய ஸ்ரீதேவி பாகுபலி-2வில் நடிக்க ராஜமவுலியை அணுகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இப்போது, தன்னிடம் சான்ஸ் கேட்ட ஸ்ரீதேவியிடம், முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். படத்தில் உங்களுக்கேற்ற வேறு கேரக்டர்கள் எதுவும் இல்லை என்று ராஜமவுலி கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.