தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2013ல் பிருத்விராஜ் நடித்து மலையாளத்தில் வெளியான 'மும்பை போலீஸ்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்தப்படத்தில் ராஸ்கல் மோசஸ் என்கிற ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாக அசத்திய பிருத்விராஜை கேரள ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். ஜோதிகாவை வைத்து '36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். அதிரடியும் டிவிஸ்ட்டும் கலந்து இந்தப்படத்திற்கு பாபி-சஞ்சய் என்ற இரட்டை எழுத்தாளர்கள் பரபரப்பாக கதை எழுதியிருந்தனர்.
இந்த 'மும்பை போலீஸ்' கூட்டணி மீண்டும் 'நாள ராவிலே' (நாளை காலையில்) என்கிற படத்தில் இணைய இருப்பதாக, கடந்த மாதம் வரை செய்திகள் உலாவிக்கொண்டு இருந்தன. ஆனால் தற்போது இந்தப்படம் கைவிடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. இந்தக்கதை கதாசிரியர்களான பாபி-சஞ்சயின் ஆறு வருட உழைப்பாகும். இந்தப்படம் ஒரு லவ் ஸ்டோரி என்றும், கோமாவில் கிடக்கும் ஒருவரின் காதல் நினைவுகள் பற்றியது என்றும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் தனது கேரக்டர், தன்னுடைய இமேஜுக்கு செட்டாகாது என பிருத்விராஜ் கூறி, இதிலிருந்து விலகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் எந்தவித இமேஜும் பார்க்காமல், 'மும்பை போலீஸ்' படத்தில் ஹோமோ செக்ஸுவல் கேரக்டரில் நடித்த பிருத்விராஜ் ஒருபோதும் இப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். மேலும் ஜெயசூர்யாவும் கூட இதில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இந்தப்படம் கைவிடப்பட்டது குறித்து பிருத்விராஜ் தரப்பில் இருந்தும் பதில் இல்லை. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசும் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார். உண்மை என்ன என்பது இன்னும் சில தினங்களில் இவர்களில் யாரோ ஒருவர் மூலமாக வெளிப்படும் என எதிர்பார்ப்போம்.