இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகைகளை வைத்திருந்த முதல் நடிகர் அரவிந்த்சாமி. அவர் ரோஜா படத்தில் நடித்திருந்தபோது அவரை ஒருமுறையேனும் காண வேண்டும் என ஏராளமான கல்லூரி மாணவிகள் அவரை காண படையெடுத்தனர். அந்த அளவுக்கு இளைஞிகளின் கனவு நாயகனாக திகழ்ந்தார் அரவிந்த்சாமி.
மேலும், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர், திடீரென்று பிஸ்னஸில் கவனம் செலுத்த சென்று விட்டதால், பின்னர் அவரது இடம் காலியாகி விட்டது. இருப்பினும் அவரை தளபதி படத்தில் அறிமுகம் செய்த மணிரத்னமே, தான் இயக்கிய கடல் படத்தில் அரவிந்த்சாமியை ஒரு பாதிரியார் வேடத்தில் நடிக்க வைத்து ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அதையடுத்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்தார் அரவிந்த்சாமி. அதை வில்லன் வேடம் என்று சொல்வதை விட நெகடீவ் ஹீரோ வேடம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம். பாசிட்டீவ் வேடங்களில் அரவிந்த்சாமியை பார்த்து ரசித்த ரசிகர்கள், இந்த நெகடீவ் வேடத்திலும் ரசித்தனர்.
அதனால் அடுத்து வில்லனாகவும் அவர் ஒரு பெரிய ரவுண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பிஸ்னஸில் கவனத்தை திருப்பிவிட்டுள்ளார் அரவிந்த்சாமி. அதோடு, தன்னை மீண்டும் நடிக்க அழைக்கும் டைரக்டர்களிடம், தொடர்ந்து வில்லனாக நடிக்கும் ஆசையில்லை. வித்தியாசமான பாசிட்டீவ் வேடங்கள் இருந்தால், அதுவும் எனக்கு பிடித்திருந்தால் நடிப்பேன். இல்லையேல் என்னை விட்டு விடுங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்கிறாராம் அரவிந்த்சாமி.