ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருகாலத்தில் ஷாகித் கபூரும், கரீனா கபூரும் காதலர்களாக வலம் வந்தவர்கள். பின்னர் ஷாகித்தை பிரிந்த கரீனா, சைப் அலிகானை காதலிக்க தொடங்கி, அவரையே திருமணமும் செய்து கொண்டார். அப்போதிருந்தே ஷாகித்திற்கும், சைப்பிற்கும் இடையே பிரச்னை என்று தொடர்ந்து செய்திகள் வந்தது. அது இப்போதும் தொடர்வதாக கூறப்படுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி இப்போது இருவரும் இணைந்து ஒருபடத்தில் நடிக்க இருக்கின்றனர். விஷால் பரத்வாஜ் இயக்கும் ரங்கூன் படத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
இதுப்பற்றி சைப் அலிகான் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், ஷாகித் கபூருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. ஷாகித் மிகவும் டீசண்ட்டானவர். அப்படியிருந்தும் ஏன் எங்களுக்குள் பிரச்னை என்று சிலர் செய்தி பரப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.