டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பழிச்சொல் தேடிவரும் அளவுக்கு நிவின்பாலி தப்பு எதுவும் செய்துவிடவில்லை.. அவர் பக்கம் எந்த தப்பும் இல்லை.. ஆனால் நேரடியாக நின்று வாரி தூற்றினால் தான் பழிசொல்லாகுமா..? கடந்த மாதம் அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதுதான் இப்படி ஒரு நிலைக்கு அவரை ஆளாக்கிவிட்டது.. காரணம் இந்த வருடம் விருது பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் தான். அப்படி இந்த இருவரில் ஒருவருக்குத்தான் விருது என்றால் அது ஜெயசூர்யாவுக்குத்தான் இருக்கும் என பரவலாக பேசப்பட்டது.
ஆனால் விருது கிடைத்ததோ, நிவின்பாலிக்கும் இன்னொரு புதுமுக நடிகருக்கும் தான்.. நிவின்பாலி நடிப்பை எந்தவிதத்திலும் குறைசொல்ல முடியாது தான். ஆனால் 'அப்போதேகேறி' படத்தில் நடித்த ஜெயசூர்யாவின் நடிப்பை விட, நிவின்பாலியின் நடிப்பு எந்த அளவுக்கு உயர்ந்தது என விமர்சனங்கள் பலபக்கம் இருந்தும் எழ ஆரம்பித்துவிட்டன. இது ஒருவகையில் நிவின்பாலியின் மனதை காயப்படுத்திவிட்டது. அதனால் இப்போது தன்மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது நடவடிக்கைய மாற்றி அமைத்துள்ளார்..
தற்போது கமர்ஷியல் வேல்யூ உள்ள படங்களில் நடித்துவரும் நிவின்பாலி, அடுத்ததாக தேசிய விருது படத்தை இயக்கிய இயக்குனர் டாக்டர் பைஜூவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ரிஸ்க்கான முடிவுதான். தேசிய விருது இயக்குனரின் கதையும் கதாபாத்திரமும் தன்னை புது ஆளாக காட்டும் என்பது அவரது நம்பிக்கை.. ஆக இன்னும் சில வருடங்கள் கழித்து எடுக்கவேண்டிய முயற்சியை, நிவின்பாலி இப்போதே எடுத்துவிட்டார் என்கிறார்கள்.