இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'கஞ்சீவரம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரியதர்ஷன், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி இணைந்த படமான 'சில நேரங்களில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. சமீப காலமாக தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படமாக இந்தப் படம்தான் இருக்கும். இந்தப் படத்தை மொத்தம் 20 நாட்களில் இயக்குனர் பிரியதர்ஷன் எடுத்து முடித்துள்ளார். அவரின் முன்னாள் உதவி இயக்குனரும், இந்நாள் இயக்குனருமான விஜய் படத்தைத் தயாரிக்க, பிரபுதேவா இந்தப் படத்தை அவரது சொந்த நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடுகிறார்.
'கஞ்சீவரம்' படம் பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த படமாக அமைந்தது. “என் பயணத்தின் முக்கியமான தருணம். நீங்களும் பெருமைப்படக் கூடிய ஒரு படம். ஒரு அர்த்தமுள்ள படத்தை உருவாக்கியுள்ள குழுவினருடன் கொண்டாட்டம்,” என படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின் கேக் வெட்டி கொண்டாடிய பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் போட்டுள்ள பதிவுதான் அந்த வார்த்தைகள். பிரியதர்ஷனும், பிரகாஷ்ராஜும் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படம் அவர்களுக்கு தேசிய விருதை மீண்டும் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.