டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'லிங்கா' படம் வெளிவந்து இத்தனை மாதங்களாகியும் அந்தப் படத்தின் நஷ்ட ஈட்டு விவகாரம் இன்னும் தொடர்ந்து கொண்டே போகிறது. நஷ்ட ஈடு தருவதாகச் சொன்ன மொத்தத் தொகையையும் இதுவரை தரவில்லை என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய இந்தப் பிரச்சனை இன்றும் நீண்டு கொண்டிருக்கிறது.
பொதுவாக, ஒரு நடிகர் நடித்த படத்தில் பிரச்சனை என்றால், அந்த நடிகர் நடித்து அடுத்து வெளிவரும் படத்தில்தான் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனையை எழுப்புவார்கள். இதற்கு முந்தைய உதாரணங்களும் இருக்கின்றன. ஆனால், 'லிங்கா' விவகாரத்தைப் பொறுத்தவரையில் அடுத்து ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள 'கபாலி' படத்தில் பிரச்சனையை எழுப்பாமல், 'பாயும் புலி' படத்தில் எழுப்பியுள்ளார்கள்.
இத்தனைக்கும் 'லிங்கா' படத்தை வாங்கி வெளியிட்டவர்கள்தான் 'பாயும் புலி' படத்தின் தயாரிப்பாளர்கள். ஒரு படத்தை வாங்கி வெளியிட்டவர்களின் தயாரிப்பில் வெளிவரும் ஒரு படத்திற்கு தடையை ஏன் ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஒன்று 'லிங்கா' படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த தயாரிப்பில் பிரச்சனையை உருவாக்க வேண்டும், அல்லது ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள அடுத்த படத்தில் பிரச்சனையை உருவாக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல், 'பாயும் புலி' படத்தின் மீது பாய்வது ஏன் என கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.
தான் நடித்த 'லிங்கா' பட நஷ்ட ஈட்டுப் பிரச்சனை பல ரூபங்களில் விஸ்வரூபமெடுத்து வருவதை ரஜினிகாந்த், இனியும் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது, அவர் நேரடியாக தலையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். ரஜினிகாந்த் சீக்கிரமே இந்தப் பிரச்சனையை முடிவுக்கக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.