திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
மாரியைத் தொடர்ந்து வேல்ராஜின் விஐபி-2 படத்தில் நடித்து முடித்த தனுஷ், பிரபுசாலமன் இயக்கும் படத்தில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். டில்லியில் இருந்து சென்னையை நோக்கி வரும் ஒரு ரயிலுக்குள் நடக்கும் காதல் கதைதான் இந்த படம். இதில் ஒரு நடிகையின் டச்சப் பெண்ணாக கீர்த்தி சுரேசும், தம்பி ராமைய்யா நடத்தும் கேட்டரிங்கில் வேலை செய்யும் டீ பாயாக தனுசும் நடித்து வருகின்றனர்.
ஆனால் கீர்த்தி சுரேசை டச்சப் பெண் என்று தெரியாமல் நடிகை என நினைத்து அவர் மீது காதல் கொள்வாராம் தனுஷ். அதேப்போல் கீர்த்தி சுரேசுக்கும் அவர் மீது காதல் பிறக்குமாம். அப்போதுதான், தான் நடிகை என்ற நினைத்த அந்த பெண் ஒரு நடிகையின் டச்சப் பெண் என்பது தனுசுக்கு தெரிய வருமாம். இதையடுத்து அவர்கள் இணைகிறார்களா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதையாம்.
மேலும், முதல் பாதியை காதல், காமெடி என கலகலப்பாக இயக்கியுள்ள பிரபுசாலமன், இரண்டாம் பாதியாக ஆக்சன் கதையில் இயக்குகிறார். காதல் உருவாகும் காட்சிகளை இதுவரை சென்னையில் செட் அமைத்து படமாக்கி வந்தவர், வடஇந்தியா சென்று படமாக்கப்போகிறாராம். ஆக, படத்தின் பிற்பாதி முழுக்க ரயிலுக்கு வெளியே நடக்கும் காட்சிகள்தான் இடம்பெறுகிறதாம். விரைவில் சென்னையில் படப்பிடிப்பை முடித்து விட்டு வடஇந்தியா பறக்கிறதாம் தனுஷ்-பிரபுசாலமன் டீம்.