பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கிய, ஜெயம் படத்தில் அறிமுகமானவர் ஜெயம்ரவி. அதன்பிறகு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி என பல படங்களில் அவர்களின் கூட்டணி தொடர்ந்தது. இந்நிலையில், அவர்களது ஆறாவதாக இணைந்த தனி ஒருவன் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதோடு, இதுவரை ரீமேக் கதைகளாக இயக்கி வந்த மோகன்ராஜா முதன்முறையாக தனது சொந்த கதையில் இந்த படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். இதனால் அடுத்தடுத்து சொந்த கதைகளையே படமாக்கும் ஆர்வம் அவருக்கு அதிகரித்திருக்கிறது.
மேலும், இந்த படத்தின் வெற்றியைப்பார்த்து அப்படத்தை இந்தி, தெலுங்கில் ரீமேக் செய்வதில் அங்குள்ளவர்கள் ஆர்வமாகி விட்டனர். அதில் முதல்கட்டமாக இந்தி நடிகர் சல்மான்கான் தனிஒருவன் படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடிக்கப்போகிறாராம். அதேபோல், தனிஒருவனில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமியின் கேரக்டர் அபிசேக்பச்சனுக்கு பிடித்து விட்டதை அடுத்து அந்த வேடத்தில் நடிக்க அவரும் தயாராகி விட்டாராம். ஆக, விரைவில் தனி ஒருவன் இந்தி ரீமேக் தொடங்கும் என்கிறார்கள். இதற்கிடையே தெலுங்கில் அப்படத்தின் உரிமையை வாங்கியுள்ள நிறுவனமும் சில முன்னணி ஹீரோக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறதாம். ஆக, தான் நடித்த படம் அடுத்தடுத்து இந்தி, தெலுங்கில் ரீமேக் ஆவதால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜெயம்ரவி.