‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய்யின் 'புலி' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் கன்னட நடிகர் சுதீப். புலி படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சுதீப். இப்படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதன் தமிழ்ப்பதிப்புக்கு 'முடிஞ்சா இவனைப் பிடி' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையமைக்க, ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று (செப்டம்பர் 2) ஹீரோ சுதீப்பின் 42வது பிறந்தநாள். எனவே, 'முடிஞ்சா இவனைப் பிடி' படப்பிடிப்பு தளத்திலேயே சுதீப்பை கேக் வெட்ட வைத்து அவரது பிறந்தநாளைகொண்டாடி உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை நித்யாமேனன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு சுதீப்பை வாழ்த்தி உள்ளனர்.