தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
இசை அமைப்பாளர் தாஜ்நூர் தற்போது ஸ்ட்ராபெரி, நெடும்பா, கள்ளன், காந்தாரி, உள்பட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். திரைப்படங்களுக்கு இசை அமைப்பதோடு அவ்வப்போது தனி ஆல்பமும் வெளியிட்டு வருகிறார். திருக்குறளுக்கு இசை அமைத்திருக்கிறார். வெளிநாடுகளில் துன்பப்படும் இலங்கை தமிழ் இளைஞர்கள் பற்றிய ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வரிசையில் அவர் அடுத்து வளைகுடா நாடுகளில் பல வேலைகளில் அவதிப்படும் இந்திய இளைஞர்களின் துன்பக்குரலை ஒலிக்கும் தமிழ் பிள்ளை என்ற ஆல்பத்தை வெளியிடுகிறார். இந்த ஆல்பத்தின் பாடலை கவிஞர்கள் அப்துல் ரகுமான், மேத்தா, இன்குலாப், பழனிபாரதி, யுகபாரதி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். தாஜ்நூர் இசை அமைத்திருக்கிறார். பிரபல பாடகர், பாடகிகள் பாடியிருக்கிறார்கள். விரைவில் இந்த ஆல்பத்தை வளைகுடா நாடு ஒன்றில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தி வெளியிட இருக்கிறார்.