அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தற்போது, 'அதிரடி' என்ற படத்தை பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் எடுத்து முடித்து சாதனை படைத்திருக்கும் மன்சூரலிகான் அடுத்து தான் தயாரித்து, நடிக்கும் படத்திற்கு ''வடபழனி கோயில்ல கல்யாணம் சரவணபவன்ல சாப்பாடு'' என்று பெயர் வைத்திருக்கிறார்.
வடபழனி கோவிலில் தனது திருமணம் நடக்க வேண்டும், திருமண விருந்தை சரவணபவனில் வைக்க வேண்டும் என்று லட்சியம் கொண்ட ஒருவன் அதற்காக போராடுகிறான். அந்த போராட்டம் வென்றதா என்பதுதான் கதையாம். முருக பக்தனான ஹீரோ இந்த லட்சியம் நிறைவேற பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், சுவாமிலை போன்ற அறுபடை வீடுகளுக்கு செல்கிறான். இங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் நடக்கிறது. மன்சூரலிகான் தயாரித்து நடிப்பதோடு பாடல் எழுதி இசை அமைக்கவும் செய்கிறார். மகுடி படத்தை இயக்கிய ஜெயக்குமார் இயக்குகிறார்.