தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் சுப்பிரமணியம் தற்போது விஜய்யின் ''புலி'' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து முடித்திருக்கிறார். இதுதவிர ''எங்கிட்ட மோதாதே'' என்ற படத்திலும் நடித்து வருகிறார். எங்கிட்ட மோதாதே படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து நிதின், சமந்தா நடிக்கும் தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
"ஒளிப்பதிவு, நடிப்பு என இரண்டு பாதையில் என் பயணம் இருக்கும், ஒளிப்பதிவுக்கு சவாலான படங்கள் அமையும்போது அதை மறுப்பது தொழிலுக்கு செய்யும் துரோகம். அதனால் ஹாலிடே, புலி மாதிரி படங்களை ஒப்புக் கொள்கிறேன். எனது நடிப்பு தாகத்தை தீர்த்துக்கொள்ள நடிக்கவும் செய்கிறேன். எங்கிட்ட மோதாதே காமெடி கலந்த ஆக்ஷன் படம். அதன் பிறகு தெலுங்கு, இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறேன். அதை முடித்து விட்டு அடுத் படத்தில் நடிப்பேன்" என்கிறார் நட்ராஜ்.