'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
வீரம் படத்திற்குப் பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து கொல்கத்தாவில் நடந்து மீண்டும் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள பின்னி மில்லில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை இயக்குனர் சிவா படமாக்கி வருகிறார். எதிரிகளுடன் அஜித் மோதும் சண்டைக் காட்சிகளைப் பரபரப்பாகப் படமாக்கி வருகிறார்களாம். இந்த சண்டைக் காட்சியை வழக்கமான சண்டைக் காட்சியாக படமாக்காமல், வித்தியாசமாகவும் அதிரடியாகவும் எடுத்து வருவதாகத் தகவல்.
அஜித் ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்க, அவருடைய தங்கையாக முதல் முறையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தின் இடைவேளை வரையிலான காட்சிகளை இயக்குனர் சிவா படத் தொகுப்பு செய்து முடித்து விட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பு முடிவடைந்ததும் இடைவேளைக்குப் பின்னர் உள்ள படத்தொகுப்பையும் முடிக்க உள்ளாராம். அதன் பின் சில பாடல் காட்சிகள் எடுப்பதுடன் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்துவிடுமாம். அதனால் திட்டமிட்டபடி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விடுவார்கள்.
வழக்கம் போலவே அஜித்தின் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் படத்திற்குப் பெயர் வைக்காமலே ஆரம்பமாகியுள்ளது. விரைவில் படத்தின் டைட்டில் அறிவிப்பை வழக்கம் போல அடுத்த சில வாரங்களில் ஏதாவது ஒரு வியாழக்கிழமையில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.