வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அஜித் ரசிகர்களுக்கும், பின்னணிப் பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயிக்கும் இடையே கடந்த சில நாட்களாக டிவிட்டரில் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் சின்மயி ஷேர் செய்திருந்தார். அதிலிருந்துதான் பிரச்சனை ஆரம்பமானது. தமிழில் காணாமல் போன நடிகராகிவிட்ட மாதவன் 'தல ஆவணியாவட்டம்- மூன்று தலைமுறைகள், கடவுளின் ஆசீர்வாதத்தால்' என அவரும், அவருடைய அப்பா, மகன் ஆகியோர் பூணூல் மாற்றும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மாதவனின் அந்த டிவிட்டர் பதிவில் தீவிர அஜித் ரசிகர் ஒருவர், “நீங்கள் விரும்பும் எதற்கும் 'தல' என எதற்கும் சொல்லாதீர்கள், அது அஜித்துக்கு மட்டுமே சொந்தமானது. உங்களை எச்சரிக்கிறேன், மாற்றிக் கொள்ளுங்கள்,” என மாதவன் டிவிட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
மாதவன் போட்ட அந்த டிவீட்டையும், அதற்கு அஜித் ரசிகர் ஒருவர் போட்ட பதிலையும் சேர்த்து 'கடவுளே....' என அஜித் ரசிகர்களைக் கிண்டலடிக்கும் விதத்தில் ஒரு புதிய பதிவை சின்மயி அவருடைய டிவிட்டரில் போட்டிருந்தார். அதன் பிறகுதான் களேபரம் ஆரம்பமானது. அஜித் ரசிகர்களை சின்மயி கிண்டலடிப்பதாக, அஜித் ரசிகர்கள் அனைவரும் கொதித்தெழுந்துவிட்டனர். கடந்த சில நாட்களாக வரம்பு மீறி கெட்ட கெட்ட வார்த்தைகளிலும் சின்மயியை எதிர்த்து பதிவிட்டு வருகின்றனர். அதை, சின்மயியும் ரி-டிவீட் செய்து வருகிறார்.
மாதவன் போட்ட டிவீட்டுக்கு, யாரோ ஒரு ரசிகர் போட்ட பதிலை, சின்மயி எதற்கு எடுத்துத் தனியாகப் போட வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், சின்மயி, “சிரிப்பு வந்தது ஷேர் பண்ணேன், சீரியஸா எடுத்துக்கிட்டா உங்க பிரச்சனை' என பதிலளித்துள்ளார். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் சின்மயியை விடுவதாக இல்லை. இன்னும் அவர்களுக்கிடையேயான பிரச்சனை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.