அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
'கவலை வேண்டாம்' படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. 'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே இயக்கத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் நடிக்க படத்திற்கான ஃபோட்டோ ஷுட்டும் நடைபெற்றது. அதன் பின் படத்திற்கு சரியான முறையில் கால்ஷீட் தாராததால் கீர்த்தி சுரேஷை நீக்கி விட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. ஆனால், கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் தராமல் ஏமாற்றியதற்குக் காரணம் தனுஷ்தான் என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷை தன்னுடைய படத்தில் ஜோடியாக்க தனுஷ் அதிக ஆர்வம் காட்டினாராம். சிவகார்த்திகேயனின் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அவர் ஜோடி போட்ட நடிகைகள் ஆகியோரை தனுஷ் சமீப காலமாகத் தேடிப் போகிறார் என்று சொல்கிறார்கள். பிரபு சாலமன் இயக்கும் படத்தில் யார் நாயகி என்று வந்த போது தனுஷ்தான் கீர்த்தி சுரேஷை சிபாரிசு செய்தாராம். பல படங்களில் நடித்தும் இன்னும் வளராத ஜீவாவுடன் நடிப்பதை விட, தனுஷ் - பிரபு சாலமன் இணையும் கூட்டணியில் நடித்தால் தனக்குப் பெயரும், புகழும் கிடைக்கும் என்று நினைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதனால், ஜீவாவை வேண்டாமென்று புறந்தள்ளிவிட்டு அந்தப் படத்திற்காக வைத்திருந்த தேதிகளைத்தான் தனுஷுடன் நடிக்கும் படத்திற்குக் கொடுத்துவிட்டாராம். ஏற்கெனவே, தனுஷ் மீது பயங்கர கடுப்பில் இருக்கும் ஜீவாவுக்கு, இப்போது கீர்த்தி சுரேஷ் விவகாரம் மீண்டும் பயங்கரக் கடுப்பை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்ற முடிவை அவருடைய அம்மாவும் முன்னாள் நாயகியுமான மேனகாதான் எடுக்கிறாராம்.