‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு, பல பிரபலங்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இதில் சினிமா மட்டுமின்றி, அரசியல், விளையாட்டு என எந்த துறையினரையும் அவர் விட்டு வைக்கவில்லை. இதனால் சினிமா விழாக்களுக்குகூட அவரை அழைத்தால், ஏதாவது வம்படியாக பேசி சிண்டு முடிந்து விடுவார் என்று சினிமாத்துறையினரே அவரைக்கண்டு பயந்து ஒதுங்கி நிற்கின்றனர்.
ஆனால் இதுவரை அவரை விமர்சித்த நபர்கள் யாருமே அவருக்கு பெரிதாக கிடுக்கிப்பிடி போடாத நிலையில், தற்போது டில்லி ஐகோர்ட்டில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார் ராம் கோபால் வர்மா.
அதற்கு காரணம், இந்தியில் தர்மேந்திரா நடிப்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஷோலே என்ற படத்தின் கதையை தழுவி ராம் கோபால் வர்மா ஒரு படமெடுத்தாராம். அதையடுத்து ஷோலே படத்தின் உரிமையை பெறாமலேயே அவர் அதே கதையை படமாக்கி விட்டதாக டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராம் கோபால் வர்மாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளார்களாம்.