இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பாலிவுட்டின் சிறப்பான நடிகர்களில் நானா பட்டேக்கரும் ஒருவர். தமிழில் பொம்மலாட்டம் படத்தில் இயக்குநராக நடித்தவர் இவர் தான். தற்போது வெல்கம் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கும் வெல்கம் பேக்-ல் நடித்துள்ளார். இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் நானா பட்டேக்கர், இப்படம் பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டது. இதோ...
வெல்கம் படத்திலிருந்து இப்படம் எந்தளவுக்கு உங்களது வேடம் மாறுபட்டுள்ளது.?
எனது கேரக்டரில் எந்த மாற்றமும் இல்லை, வெல்கம் படத்தில் நடித்த உதய் ஷெட்டி கேரக்டரில் தான் நடிக்கிறேன். அதேசமயம் இப்படத்தில் நான் மிகவும் எளிமையான கேரக்டரில் ஓய்வுபெற்ற பாயாக நடித்துள்ளேன். ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன், இந்தப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும், நிச்சயம் ரசிகர்கள் இப்படத்தை ரசிப்பார்கள்.
இரண்டாம் பாகம் படத்தில் நடிப்பது சுலபமா...?
அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வரும்போது அதே கேரக்டர் தான் பெரும்பாலும் இருக்கும். இது சம்பந்தப்பட்ட நடிகருக்கும் ஈஸியானது தான். இந்தப்படத்தில் கூட என்னுடைய மற்றும் அனில் கபூரின் கேரக்டரும் முந்தைய படத்தின் கேரக்டர் தான். எனக்கு ஒன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
பழைய படங்களின் காமெடிக்கும், இப்போது உள்ள படங்களின் காமெடிக்கும் வித்தியாசம் ஏதும் உண்டா.?
உண்மை தான், நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. எங்களது காலத்தில் காமெடி படங்களில் ஒரு உணர்வு இருந்தது. ஆனால் இப்போது வரும் படங்கள் எல்லாம் அப்படி கிடையாது. ஒரு சில படங்களில் மட்டும் தான் அத்தகைய உணர்வு இருக்கிறது. பெரும்பாலான படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் தான் இடம்பெறுகிறது. எங்களுடைய காலகட்டங்களில் ஒரு தனிநபரின் காமெடி கூட ரசிக்கும்படியாக இருந்தது. இன்றைக்கு வரும் காமெடிகளில் ஆபாசம் தான் அதிகம் இருக்கிறது. ஆகையால் இன்றைய காலக்கட்டத்தை விட எங்களது காலக்கட்ட காமெடி படங்கள் தான் ரசிக்கும்படி இருந்தது.
பெரோஸ் கான் இல்லாதது வருத்தமா...?
வெல்கம் படத்தின் ஷூட்டிங்கின் போது பெரோஸ் எங்களுடன் இருந்தார். ஆனால் இப்போது அவர் இல்லாதது வருத்தமான விஷயம் தான். வெல்கம் பேக் படத்தின் ஷூட்டிங்கின் போது நிச்சயம் பெரோஸ் கான் நடிப்பார் என்ற ஆவலில் இருந்தோம். ஆனால் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக இப்போது நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார். அவரும் அருமையாக நடித்துள்ளார், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அங்கிதா ஸ்ரீவஸ்தாவுடன் நடித்த அனுபவம் பற்றி..?
அங்கிதா புதியவர் தான், ஆனால் நல்ல நடிகை. அவருடன் எனக்கு காதல் தொடர்பான காட்சிகள் எதுவும் கிடையாது. இயக்குநர் என்ன சொன்னாரோ அதை செய்துள்ளேன். மற்றபடி முத்தக்காட்சி எல்லாம் கிடையாது. மேலும் வெல்கம் பேக் படம் அனைவருக்கும் ரசிக்கும்படியான படமாக இருக்கும்.
உங்களது பலவீனம் என்ன.?
ஆங்கிலம் தான் எனது பலவீனமே. ஆங்கிலம் சரியாக வராததால் நிறைய ஹாலிவுட் படங்களின் வாய்ப்பை இழந்துள்ளேன். நான் கிராமத்தில் பிறந்து படித்தவன், அதனால் ஆங்கிலம் சரிவர பேச வராது. இப்பவும் அந்த தடுமாற்றம் உள்ளது. ஹிந்தியும் அப்படித்தான். அதேசமயம் மராத்தி மொழியை சரளமாக பேசுவேன்.
எந்த மொழி படங்களில் நடிக்க ஆசை.?
மராத்தி மொழி படங்களில் தான் எனக்கு நடிக்க ஆசை. காரணம், அந்த மொழி படங்களில் தான் அழுத்தமான கதை இருக்கும். பழைய இயக்குநர்கள் மட்டுமல்ல புதியவர்கள் கூட மராத்தியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை இயக்குகிறார்கள். ஆனால் பாலிவுட்டில் அப்படி கிடையாது. வெறும் பணம் சம்பந்தப்பட்ட அதாவது, ரூ.100 கோடி, ரூ.200 கோடி வசூல் செய்யும் படங்களை இயக்குகிறார்கள். நல்ல கதையிருந்தும் ரசிகர்கள், மராத்தி மொழி படங்களுக்கு வரவேற்பு தர மறுக்கிறார்கள்.
பணம் ஒருவரை மாற்றிவிடும், ஆனால் நீங்கள் இப்போதும் மாறாமல் இருக்கிறீர்களே ஏன்...?
உண்மை தான். நான் எப்பவும் எனக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். இன்றைக்கு எனக்கு பெயர், புகழ் எல்லாம் கிடைத்துள்ளது. வாழும் வரை மட்டும் தான் இவையெல்லாம் இருக்கும். இந்த உலகத்தை விட்டு நாம் செல்லும்போது இவைகள் எதுவும் கூட வரப்போவதில்லை. ஆகையால் பணம், புகழுக்காக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். இது இப்போது மட்டும் அல்ல என் வாழ்நாள் முழுக்க இது தொடரும். நான் மாற மாட்டேன்.
இவ்வாறு நானா பட்டேக்கர் கூறியுள்ளார்.