டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிம்புவும், சர்ச்சையும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் போலவே இருக்கிறார்கள். இப்போதுதான் 'வாலு' சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்து படமும் வெளிவந்து ரசிகர்களை சோதித்துப் பார்த்தது. இப்போது அடுத்த ஒரு சர்ச்சையை சிம்புவும், அவருடைய அப்பா டி.ஆரும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை. இரண்டு பாடல்கள் எடுக்க வேண்டியுள்ளது, அதற்கு நயன்தாராவின் கால்ஷீட்டை வாங்கித் தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ஆர். புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், நயன்தாராவிற்கு இதுவரை நடித்ததற்கே சம்பளத்தை சரியாக கொடுக்கவில்லையாம். அதனால் அவர் எப்படி நடிக்க வருவார் எனச் சொல்கிறார்கள். அதை மறைத்து விட்டு, நயன்தாரா ஏதோ வேண்டுமென்றே வராதது போல ஒரு பிரச்சனையை டி.ஆர் உருவாக்குவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், படத்தை எடுத்து முடிக்க தயாரிப்பாளரான டி.ஆர். பல நேரம் கை விரித்த நேரத்தில் இயக்குனர் பாண்டிராஜே அவருடைய சொந்தப் பணத்தைப் போட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள். அவருக்கும் கோடிக்குப் பக்கத்தில் பணம் தர வேண்டுமாம்.
ஆனால், டி.ஆர் புகார் கொடுத்ததன், பிரச்சனை அதுவல்ல என்கிறார்கள். படத்தின் பிரமோஷனுக்காக ஒரு பாடலை எடுக்க டி.ஆரும், சிம்புவும் திட்டமிட்டுள்ளார்களாம். அந்தப் பாடலில் சிம்பு, டிஆர், படத்திற்கு இசையமைத்துள்ள டி.ஆரின் இளைய மகன் குறளரசன் ஆகியோர் நயன்தாராவுடன் இணைந்து ஒரு பாடலைப் படம் பிடிக்க திட்டம் போட்டுள்ளார்களாம். அது தெரிந்துதான் நயன்தாரா படத்திற்கு கால்ஷீட் தரவில்லை என்கிறார்கள். படத்திற்குண்டான காட்சிகள் அனைத்தையும் அவர் முடித்துக் கொடுத்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். இவர்களில் யார் சொல்வது உண்மை என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆனாலும், சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு பலமான சர்ச்சையை டி.ஆர் எழுப்பப் போவது உறுதி.