ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எல்லா திரையுலகிலும் அறிவுஜீவி என தங்களை நினைத்துக்கொள்ளும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. தாங்கள் உருவாக்குவதுதான் கதை, எடுப்பதுதான் படம் என்கிற கொள்கை உடையவர்கள்.. படத்தை தயாரிப்பவர்களும் அதில் நடிக்கும் ஹீரோக்களும் இயக்குனரின் ஸ்டார் வேல்யூ கருதி எதுவும் பேசாமல் கொடுத்த வேலையை செய்துவிட்டு போய்விடுவார்கள்.. கடந்த 2 வருடங்களுக்கு முன் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் புதிய முயற்சி என்கிற பெயரில் அப்படி ஒரு சோதனையை சந்தித்தார் ஆர்யா.
ஆனால் இப்போது அதுக்கும் மேல என்று சொல்லும் விதமாக, ஆர்யாவும் பிருத்விராஜும் இணைந்து நடித்து, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரியின் டைரக்சனில் வெளியான 'டபுள் பேரல்' படம் அமைந்துவிட்டது.. இந்த நான்கு நாட்களில் படத்தின் கலெக்சன் அதலபாதாளத்தில் கிடக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்களான பிருத்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன் மற்றும் இன்னொருவர் என நான்கு பெரும் படத்திற்காக பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளார்கள்.