கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு முன்வந்துளளதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, சிவாஜி குடும்பத்தினர் சந்தித்துப் பேசினர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம், அடையார் பகுதியில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா, கடந்தவாரம் சட்டசபையில் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு, நடிகர்கள் பிரபு, கமல்ஹாசன், ரஜினி, சரத்குமார், விஷால், திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை, சிவாஜி குடும்பத்தினர் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
இந்த மணிமண்டபத்தில், தற்போது சென்னை மெரினா பீச்சில் உள்ள சிவாஜி சிலை வைக்கப்பட உள்ளதாக, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு அளித்துள்ள பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.