பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
கன்னடத் திரையுலகின் முக்கிய குடும்பமான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேத்தியும், நடிகர் சிவராஜ்குமாரின் மகளான நிருபமாவின் திருமணம் நேற்று காலை பெங்களூரு பேலஸ் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழைப் பெறுவதற்காக சிவராஜ்குமாரின் ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டியுள்ளனர். அதை அறிந்த 'பிளாக்' மார்க்கெட்டினர், ஒரிஜனல் அழைப்பிதழ் போலவே போலியான அழைப்பிதழ்களை அச்சிட்டு 10000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை விற்றிருக்கின்றனர். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட சிவராஜ்குமார் குடும்பத்தினர் திருமண அரங்கில் பலத்த பாதுகாப்பைப் போட்டுள்ளனர். எண்ணற்ற காவல் துறையினருடன், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினரும் நேற்றைய திருமணத்தில் பாதுகாப்பைக் கவனித்துள்ளனர். நேற்று காலை பெங்களூரு நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறியிருக்கிறது.