ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனது வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரை களத்தில் இறங்கி விட்டுவிட்டார் வைரமுத்து. அதில் மதன் கார்க்கி பல ஹிட் பாடல்களை கொடுத்திருப்பதோடு, பாகுபலி உள்பட சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இப்படி வாரிசுகள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோதும், வைரமுத்துவின் பாட்டுப்பயணம் எந்தவித தொய்வும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், விஜய் படங்களுக்கு பெரும்பாலும் பாடல்கள் எழுதாத அவர், இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதோடு விஷாலின் பாயும்புலி படத்திற்கும் வைரமுத்துதான் பாடல் எழுதியிருக்கிறார். ஆக, ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் ஓப்பனிங் பாடல், தத்துவப்பாடல் என்று எழுதியுள்ள வைரமுத்து, இந்த புலி படத்தில் விஜய்க்காக ஒரு புரட்சிகரமான பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக, பாட்ஷாவில் ரஜினிக்காக எழுதிய ஆட்டோக்காரன், ரா ரா ராமைய்யா பாடல்களைப்போன்று எளிதில் புரியும் வகையிலான வார்த்தைகளை கோர்த்து எழுதியிருப்பதாக சொல்கிறார் வைரமுத்து.