600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தற்போது பேய் படங்களை மொத்த குத்தகை எடுத்து வருகிறது தேனாண்டாள் பிலிம்ஸ். அருந்ததி, காஞ்சனா, அரண்மனை, பிசாசு, டிமான்டி காலனி என வரிசையாக பேய் படங்களாக வெளியிட்டு ஹிட் கொடுத்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ், ஸ்ரீகாந்த் நடித்துள்ள சவுகார் பேட்டை படத்தையும் வெளியிடுகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப்போர் என்ற படத்தையும் அவர்கள் வெளியிடப்போகிறார்களாம். 2025ல் இந்தியா-சீனாவுக்கிடையே போர் நடந்தால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மையப்படுத்தி இப்படம் தயாராகியிருக்கிறது. சுகன் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் சுனில்குமார், அகிலா கிஷோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பெரும்பகுதி இந்தியா-சீனா பார்டரில்தான் நடத்தப்பட்டுள்ளது. அங்கே போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமின்றி, காதல் காட்சிகளும் படமாகியிருக்கிறதாம். இப்படியொரு போருக்கு நடுவே, இந்தியாவைச்சேர்ந்த ஒரு இளைஞனும், சீனாவைச்சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிப்பது ஒரு பக்கம் உயிரோட்டமாக படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த மூன்றாம் உலகப்போர் பார்த்த தேனாண்டாள் பிலிம்ஸ் தாங்கள் வெளியிடுவதாக கூறியிருக்கிறார்களாம்.