பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'டெய்சி' என்ற பெயரில் உருவான படம் பின்னர் 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்று பெயர் மாற்றப்பட்டது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இருவரும் சேர்ந்து டிரைலரை வெளியிட்டனர்.
'உனக்கென்ன வேணும் சொல்லு'படத்தை இயக்கும் ஸ்ரீநாத், இலங்கையில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவில் சினிமா கற்று வந்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத்துக்கும், வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த 'மாஸ்' படத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளதாம். மாஸ் படத்தில் ஸ்ரீநாத்தின் பங்கும் இருந்தது என்பதை விழாவில் வெங்கட் பிரபு தெரிவித்தார். அதாவது மாஸ் படத்தில் இலங்கையை சேர்ந்த சக்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா.
அவருக்கு இலங்கை தமிழில் பேசவும், அந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட மேனரிசங்களை சொல்லிக் கொடுத்ததும் ஸ்ரீநாத் தானாம்!
'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை சொன்னார் இயக்குனர் ஸ்ரீநாத்.
''இப்படம் 'டெய்சி' என்ற பெயரில் உருவாகும்போது நிறைய பிரச்சனைகளை சந்தித்தோம். ஆனால் இப்படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்த 'ஆரா சினிமாஸ்' நிறுவனத்தை சேர்ந்த மகேஷ் படத்தை பார்த்துவிட்டு, ''டெய்சி' என்ற டைட்டில் இந்த கதைக்கு பொருந்தவில்லை. இந்த டைட்டில் ஆங்கில படத்தை குறிப்பது மாதிரி இருக்கிறது, படத்தில் நிறைய இடங்களில் வருகிற வசனமான 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்பது இந்த கதைக்கு பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்று சொன்னார். அது மட்டுமல்லாமல் அவரும், நானும், இப்படத்தில் பணியாற்றியுள்ளவர்கள் அஜித் சார் ரசிகர்கள்! அதனால் அஜித் படப்பாடல் வரியில் அமைந்த இந்த டைட்டில் எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது. அதனால இந்த டைட்டிலை வைத்தோம். டைட்டிலை மாற்றி வைத்ததும் படத்திற்கு ஏற்பட்ட எல்லா தடங்கல்களும் விலகி பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இப்படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.